டிக்கெட் வசூல் மோசடி..? தனியார் பேருந்து ஓட்டுநரின் கைகளை ஜன்னலில் கட்டி தாக்குதல்..?

0 582

மதுரை மாட்டுத்தாவணியில் தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரை, உரிமையாளர்கள் கட்டி வைத்து தாக்கியதாக வீடியோ வெளியான நிலையில்,காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மாட்டுத்தாவணியில் இருந்து புறப்படும் ஆர்.பி.டி டிராவல்ஸ்க்கு சொந்தமான பேருந்தின் ஓட்டுநர், வழியில் பயணிகளை ஏற்றும்போது அந்தப் பணத்தை தன்னுடைய கூகுள் பே எண்ணில் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக கூறி, ஜன்னலில் கைகளை பின்னால் கட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஓட்டுநரை தாக்கிய வீடியோவை, ஆம்னி பேருந்துகள் ஓட்டுனர்கள் உள்ள whatsapp குழுவில் பதிவிட்டு இவரை யாரும் பணிக்கு சேர்க்கக்கூடாது என எச்சரித்தநிலையில் அது பலருக்கு பகிரப்பட்டது.

அந்த வீடியோவை அடிப்படையாக வைத்து மாட்டுத்தாவணி போலீசார் இருதரப்பையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments