கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து.. கார் ஓட்டுநர் மற்றும் இளம்பெண் உயிரிழப்பு..!

0 359

திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையம் அருகே, தாய், மகள் உள்பட 4 பேர் சென்ற ஸ்கார்பியோ கார், நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறம் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி தலைக்குப்புற கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஓட்டுநர் பெரியசாமியும், 25 வயதான ரஞ்சனி பிரியாவும் படு காயமடைந்து காரில் சிக்கியபடி இறந்ததாகவும், ரஞ்சனியின் தாயாரும், மற்றொரு உறவினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments