கேமி புயலால் பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் நாடுகளில் பாதிப்பு.. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு

0 318

கேமி சூறாவளிப் புயலால் பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பல பகுதிகளில் கனமழை கொட்டியதால், ஏராளமான கிராமங்கள் மற்றும் நகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தைவானில் கேமி புயலால், அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர்.

ஜப்பானின் இஷிகாகி தீவுப் பகுதியை கேமி புயல் தாக்கியது. பலத்த காற்றால் கடற்கரைப் பகுதியை அலைகள் ஆக்ரோஷமாகத் தாக்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments