கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன்

0 225

கொடநாடு வழக்கு தொடர்பாக மேலும் 4 பேருக்கு கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டதோடு, சுமார் 300 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த உதயன், தீபு ஆகியோர் நாளையும், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோர் வரும் 30 ஆம் தேதியும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments