திருச்சியில் கடன் தொல்லையால் தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

0 596

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த காமராஜர் காலனியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கிருஷ்ணமூர்த்தி - கிர்த்திகா தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும் 14 வயதில் மகனும் இருந்தனர். அரிசி ஆலை கூலித் தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவுப் பணிக்குச் சென்றுவிட்டு அதிகாலை 3 மணிக்கு வீடு திரும்பியபோது, மனைவியும் பிள்ளைகளும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தனர்.

கிர்த்திகா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாகவும் அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments