ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் உயிரிழப்பு.. குளியல் அறையில் மூவரும் சடலமாகக் கிடந்தனர்

0 678

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சனத் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 25 வயது மகன் உயிரிழந்தனர்.

குளியல் அறையில் மூன்று பேரும் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து போலீசாருக்கு வீட்டுப் பணிப்பெண் தகவல் கொடுத்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து மூவரும் இறந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், அவர்களது உடலில் அதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை என்றும், சந்தேக மரணம் என்ற வகையில் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments