கரூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து - 3 பேர் பலி

0 394

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று குடும்பத்தினருடன் திரும்பி வந்துக் கொண்டிருந்த கிருஷ்ணகுமார் என்பவர் ஈரோடு செல்வதற்காக மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆண்டிப்பட்டி கோட்டை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தின் மீது வேகமாக மோதியது.

காரை ஓட்டிய கிருஷ்ணகுமார், அவரது 10 வயது மகள் வருணா, மாமியார் இந்திராணி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments