சாயல்குடி பேருந்து நிலையம் அருகே திடீரென விஷவாயு கசிவு எனத் தகவல்... பொது மக்கள் வீடுகளை காலி செய்து வெளியேற்றம்

0 278

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையம் அருகே திடீரென விஷவாயு பரவி சிலர் மயக்கம் அடைந்ததாக பரவிய  செய்தியால்  அப்பகுதி மக்கள் தங்களது வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  சென்ற  தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் பல காலமாக பயன்பாடு இல்லாத பெரியளவிலான சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

பிளம்பர் ஒருவர் தவறுதலாக சிலிண்டரை தள்ளியதில் வாயு கசிவு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments