கலை - அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் - ராமதாஸ்

0 283

கலை - அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை தமிழக அரசு செயல்படுத்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்களுக்கு அரசு தற்போது வழங்கும் 20 ஆயிரம்  ரூபாய் என்பது மதிப்பூதியம் அல்ல அவமதிப்பூதியம் என்று அவர் விமர்சித்துள்ளார்.

வழக்கமாக வழங்க வேண்டிய ஊதியத்தைக் கூட கடந்த 3 மாதங்களாக வழங்காமல் இருப்பதாகவும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments