ஆடி பவுர்ணமியை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

0 337

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை ஒட்டி லட்சக் கணக்கான மக்கள் வருகை தந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  பக்தர்கள் ஏராளமானோர் கடற்கரையில் குவிந்தனர். இவர்கள், கடல் ஆரத்தி எடுத்து சமுத்திர அபிஷேகத்தில் கலந்து கொண்டு இரவு கடற்கரையில் தங்கி அதிகாலையில் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர் 

ஆடி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன்  கோயிலில் வடிவுடை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments