தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

0 392

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வார இறுதி நாளையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பேருந்துகளில் பயணிகள் சிலர் முண்டியடித்து ஏறியதால், மற்ற பயணிகள் ஏற முடியாத நிலை ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியோர் என பலரும் நடைமேடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் படுத்து உறங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments