மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு தொடர்பாக பாஜக போராட்டம் நடத்த முடிவு - அண்ணாமலை

0 223

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு இரண்டையும் மையப்படுத்தி பாஜக சார்பில் நான்கு இடங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை மடிப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் பொதுமக்களை பங்கு பெறச் செய்து மாநாட்டை போல போராட்டம் நடத்தி நாள் முழுவதும் பேசவிருப்பதாகத் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர மத்திய அரசு தயார் என்று கூறிய அண்ணாமலை தமிழக நிதி அமைச்சர் தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments