தஞ்சாவூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி

0 278

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் தலா 7 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சத்துணவு ஊழியர் அமைப்பாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி வரதராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விளத்தூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன், வினோத் மற்றும் முத்து ஆகியோரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவான வரதராஜன் சாக்கோட்டை இருப்பதாக அறிந்த இருவரும் அவரை பிடித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments