வாணியம்பாடி அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை கடிக்க முயன்ற தெருநாய்கள்

0 397

வாணியம்பாடி அருகே சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமியை 3 தெரு நாய்கள் துரத்திச் சென்று கடிக்க முயன்ற போது அச்சிறுமி செய்வதறியாது அச்சத்துடன் சாலையில் நின்றார்.அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நாய்களை விரட்டி சிறுமியை மீட்டார்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments