மோசமான வானிலையால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்... 11 பேரையும் பத்திரமாக மீட்ட கடலோர காவல் படையினர்

0 479

கொச்சியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில், நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

மோசமான வானிலையால் நடுக்கடலில் தத்தளிப்பதாக ஆபத்து கால சமிக்ஞை கருவி மூலம் மீனவர்கள் தெரியப்படுத்தினர்.

அதை தொடர்ந்து டோர்னியர் கண்காணிப்பு விமானம் மூலம் மீனவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த கடலோர காவல் படையினர், 2 கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரில் சென்று மீனவர்களையும், தண்ணீர் புகுந்திருந்த அவர்களது மீன்பிடி படகையும் மீட்டு வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments