ஓமனில் எண்ணெய்க் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 8 இந்தியர்கள் உயிருடன் மீட்பு

0 342

ஓமன் கடல்பகுதியில் கவிழ்ந்த எண்ணெய் டாங்கர் கப்பலில் இருந்து 8 இந்தியர்களையும் இலங்கைப் பிரஜை ஒருவரையும் இந்திய கடற்படைக் கப்பல் உயிருடன் மீட்டுள்ளது. உயிரிழந்த இந்தியர் ஒருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

13 இந்தியர்கள்3 இலங்கை குடிமக்களுடன் சென்ற அந்தக் கப்பல் கடலில் கவிழ்ந்ததையடுத்து மீட்பு மற்றும் தேடல் பணியில் ஓமன் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்தியக் கடற்படைக் கப்பல் தேக் ஈடுபடுத்தப்பட்டது.எஞ்சிய நபர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments