விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த 62 காவலர்கள் வேலூர் சரகத்துக்கு மாற்றம்

0 392

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த 62 காவலர்களை வேலூர் சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரிந்த ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரிந்த உளவு பிரிவு, தனிப்பிரிவு மற்றும் ஸ்பெஷல் டிவிஷன் காவலர்கள் 17 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments