சாலையில் வேகமாக காரை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்திய சிறுவன்... 2 பேர் காயம்- 5 இருசக்கர வாகனங்கள் சேதம்

0 440

சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் 9 ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் தாறுமாறாக காரை ஓட்டியதில் சாலையில் சென்ற 2 பேர் காயம் அடைந்தனர்.

சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு அதிவேகமாக நிற்காமல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்று காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

காரை மடக்கிய போலீசார் சிறுவனைப் பிடித்து விசாரித்ததில், தனது பெரியப்பாவின் இனோவா காரை எடுத்துக்கொண்டு, நண்பருடன் காரை ஓட்டியது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments