அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நீலகிரிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்

0 301

நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர் மழையால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னம்புழா, ஓவேலி ஆறு உட்பட சிறுசிறு ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதேபோல தேவாலா நீர்மட்டம் பகுதிகளிலும் சிறு சிறு சிற்றருவிகள் உருவாகி உள்ளது. தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மிதி படகுகள், துடுப்பு படகுகளில் புகுந்துள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கூடலூர் அருகேயுள்ள படச்சேரி மற்றும் கூடலூர் கோக்கால் பகுதியில் ஒரு சில வீடுகள் இடிந்துள்ள நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள நடைபாதைகள் தடுப்புச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments