முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!

0 758

சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அபகரித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கேரள மாநிலம் திருச்சூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது அவரும், அவரது ஆதரவாளர்களும், தனது மனைவி, மகளை மிரட்டி மோசடியாக தங்களது நிலத்தை பத்திரபதிவு செய்தாக குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதில், விஜயபாஸ்கர், அவரது சகோதரர் உள்ளிட்ட 7 பேர் மீது கரூர் மாவட்ட போலீசார் பதிவு செய்த வழக்கு சிபிசிபிஐடிக்கு மற்றப்பட்டது.

இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments