ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பு மோதல்.. 3 பேர் படுகாயம்,2 பேர் கைது..!

0 385

வேலூர் மாவட்டம் சீதாராமன் பட்டியில் கெங்கையம்மன் கோயில் விழாவையொட்டி நடத்தப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

நிகழ்ச்சியின் போது ஒரு தரப்பினரை சற்று தள்ளி உட்காருமாறு மற்றொரு தரப்பினர் கூறியதால் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் கத்தி மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டதாகவும், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments