சென்னையில் இருந்து விமானம் மூலம், மலேசியாவிற்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

0 505

சென்னையில் இருந்து விமானம் மூலம், மலேசியாவிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையத்தில் ஆண் பயணி ஒருவர் வைத்திருந்த 2 அட்டை பெட்டிகளை ஆய்வு செய்ததில், அதில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச்செல்ல தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள சுமார் 160 நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஆந்திராவின் சதுப்பு நில பகுதியில் இருந்து ஒரு நட்சத்திர ஆமையை 100 ரூபாய்க்கு வாங்கி, மலேசியாவில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments