கோவையில் தோட்டத்துக்குள் பலாப்பழத்தை பறித்துச் சாப்பிட்ட ஒற்றை காட்டு யானையை விரட்டிய நாய்கள்

0 445

கோவை தடாகம் அருகே காளையனூரில் மனோகரன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை மீண்டும் வந்து அங்கிருந்த பலாமரத்தில் பலாப்பழத்தை பறித்து தின்றது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் டார்ச் அடித்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது, அங்கிருந்த நாய்கள் விடாது குரைத்ததால், யானை அங்கிருந்து விலகி மாங்கரை வனப்பகுதிக்குள் சென்றது. மாங்கரை சோதனைச்சாவடி அருகே யானை நடமாடுவதால், மக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments