நாமக்கலில் முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது அதிவேகமாக மோதி கார் காயங்களுடன் உயிர் தப்பிய மூவர்

0 323

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்ரஷி என்பவர் குடும்பத்துடன் தாராபுரத்தில் இருந்து சொந்த ஊரான சேலத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர்கேட் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் அதிவேகமாக மோதியது.

இதில்,காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காரின் இருக்கையின் நடுவே சிக்கிக்கொண்ட சுல்தான் என்ற நபரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு தாமதம் ஆனதால் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் தனியார் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments