விவசாய வேலைக்குச் சென்ற இரு பெண்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

0 472

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த புளிச்சபள்ளம் கிராமத்தில், சேகர் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து இரு பெண்கள் உயிரிழந்தனர்.

சவுக்கு பயிரிட்டுள்ள சேகர் தனது நிலத்தைச் சுற்றி இரும்புக் கம்பி வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில், காற்று-மழை காரணமாக சேகருடைய நிலத்தில் உள்ள கம்பி வேலி மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இது தெரியாமல், விவசாய வேலைக்குச் சென்ற புளிச்சபள்ளத்தைச் சேர்ந்த சத்தியவேணி, வீரம்மாள் இருவரும் கம்பி வேலியைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments