தகுதியுள்ள மகளிர்க்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - தூத்துக்குடி எம்.பி கனிமொழி

0 335

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

கோவில்பட்டி அருகே வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், இதைத் தெரிவித்தார்.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்குவதில்லை என்றும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் அதிக அளவு வேலை கொடுக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments