நைஜீரியாவில் தனியார் பள்ளிக் கட்டிடம் இடிந்து 22 மாணாக்கர்கள் உயிரிழப்பு

0 407

நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம் இடிந்து 22 மாணாக்கர்கள் உயிரிழந்தனர்.

வகுப்புகள் வழக்கம்போல நடைபெற்ற போது பள்ளியின் 2 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கிய 130-க்கும் மேற்பட்டவர்களை இடிப்பாடுகளில் இருந்து உள்ளூர் மக்களும், மீட்புப்படையினரும் இணைந்து மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments