அரசு பள்ளியில் சீட் கொடுக்க மறுப்பதாக நாகலாந்து மாணவி பரபரப்பு புகார்

0 334

சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேர சீட் கொடுக்க மறுப்பதாக நாகலாந்து மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

சிங்கம்புணரியில் 13 ஆண்டுகளாக தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த நாகலாந்தை சேர்ந்த ரூத் என்ற பெண், தமது 2 பெண் பிள்ளைகளையும் அதே பள்ளியில் படிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இடையில் கொரோனா காலத்தில் மகள்களை அழைத்துக் கொண்டு நாகலாந்து சென்று விட்டு 2 ஆண்டுகளுக்குப் பின் சிங்கம்புணரி திரும்பிய ரூத், மூத்த மகள் அக்மலாவுக்கு 11-ஆம் வகுப்பில் சேர சீட் கேட்டு உரிய சான்றிதழ்களை கொடுத்த போதும் பள்ளி நிர்வாகம் இடமளிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments