நகைக்கடையில் முதியவரை ஏமாற்றி 5 சவரன் நகை திருட்டு.. சிசிடிவி காட்சி அடிப்படையில் திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு

0 447

கோவை ராஜவீதியில் உள்ள நகைக் கடையில் நகை வாங்குவது போல் நாடகமாடி முதியவரை திசை திருப்பி 5 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

விஷ்ணு என்பவரின் நகைக்கடையில் அவரது வயதான தந்தை மட்டும் இருந்த போது வந்த அந்நபர், நகைகளை எடுத்துக் காட்டச் சொன்னதாகவும், அதற்காக முதியவர் திரும்பிய போது கண்ணிமைக்கும் நேரத்தில் அலமாரியில் இருந்த நகையைத் திருடி விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விஷ்ணு அளித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்நபரை தேடி வருவதாகவும் போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments