தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப்-1 முதல் நிலை தேர்வு

0 1807

சனிக்கிழமையன்று நடைபெறும் குரூப்-1 எனப்படும் டி.என்.பி.எஸ்.சி . ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் சென்னையில் 124 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 797 மையங்களில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

ஓ.எம்.ஆர் முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இடம்பெறும் இத்தேர்தவில், பட்டப்படிப்பு தரத்தில் 175 கேள்விகளும், திறனறிதல், நுண்ணறிதல் பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தரத்தில் 25 கேள்விகளும் என கேட்கப்படும்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாக மையத்திற்கு வருமாறும், ஹால் டிக்கெட்டுடன் ஆதார் போன்ற ஏதோ ஒரு அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments