இருசக்கர வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்.. வெளியான சிசிடிவி காட்சி

0 427

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இடிப்பதை போல் வந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பிய இருசக்கர வாகன ஓட்டியை சக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அருள்புரத்தில் வசிக்கும் இளங்கோ என்பவர், மெதுவாக வரலாமே என ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டதாகவும், அவர் தகாத வார்த்தைகள் பேசியதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த இளங்கோ அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments