மாட்டு வண்டிகளின் மீது அரசு பேருந்து மோதி 2 காளைகள் பலி.. மாட்டு வண்டிகளின் பின்னால் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததே விபத்துக்கு காரணமா..?

0 406

திருவண்ணாமலை - திருக்கோவிலூர் நான்கு வழிச்சாலையில் சடைக்கட்டி அருகே 2 மாட்டு வண்டிகளின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 காளைகள் உயிரிழந்த நிலையில் வண்டிகளை ஓட்டிவந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் மற்றும் மணிகண்டன் மாட்டுவண்டியில் வைக்கோலை ஏற்றிச்சென்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையில் இறக்கிவிட்டு அதிகாலை வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு பேருந்து அதிவேகமாக வந்ததும் இரவில் சென்ற மாட்டு வண்டிகளின் பின்னால் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததுமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments