புதுக்கோட்டை ரவுடி துரை என்கவுன்டர் - காவல்துறை விளக்கம்

0 368

ரவுடி துரை என்கிற துரைசாமியை பிடிக்க முயற்சித்த போது அவர் கத்தியால் தாக்கியதால் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக புதுக்கோட்டை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வம்பன் காட்டுப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித் திரிவதாக வந்த தகவலையடுத்து ஆலங்குடி ஆய்வாளர் முத்தையன், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சென்றதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டுத்துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் இருந்த இருவரை விசாரிக்க முற்பட்டபோது துரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட நிலையில், ஆய்வாளர் ஒதுங்கிக் கொண்டதால் அவர் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நாட்டு துப்பாக்கியை லோடு செய்து சுட முற்பட்ட துரையை உதவி ஆய்வாளர் மகாலிங்கம் பிடிக்க முயற்சித்த போது அவரை கத்தியால் தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடந்ததாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments