பிளைவுட் பலகை வைத்து கட்டப்பட்ட ஓட்டுநர் இருக்கை.. அரசுப்பேருந்தின் அவல நிலை..!

0 339

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பாதை வழியாக கேர்மாளம் செக்போஸ்ட் வரை இயக்கப்படும் அரசு பேருந்தில் ஓட்டுநர் இருக்கை சேதமடைந்துள்ளதால், ஓட்டுநர் சிரமத்துடன் பேருந்தை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது.

மலை மீது வாகனம் ஏறும்போது ஓட்டுநரின் இருக்கை வலுவாக இருக்க வேண்டும் என்பது போக்குவரத்துத் துறை அறிவுறுத்தலாகும். இந்நிலையில், 15 கிலோ மீட்டர் தொலைவிலான கடம்பூர் மலைப்பாதை வழியாக தினமும் இரு முறை இயக்கப்படும் பேருந்தில், ஓட்டுநர் இருக்கையின் சாயும் பகுதியில் பிளைவுட் பலகை வைத்து கட்டப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments