ஜெயக்குமார் வாயில் நல்ல வார்த்தையே வராது; அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை: ஓ.பன்னீர் செல்வம்

0 558

அ.தி.மு.க தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்ற ஜெயக்குமாரின் கருத்துக்கு, ஓ.பி.எஸ் காட்டமாக பதிலளித்துள்ளார்.

சென்னை எழும்பூரில், மாவீரன் அழகு முத்துகோன் உருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார்.

விக்கிரவாண்டியில் 83 விழுக்காடு ஓட்டுகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் அதிமுகவினரின் ஓட்டுகளும் அடங்கும் என்று கூறிய ஓ.பி.எஸ், அந்த வாக்குகள் யாருக்குச் சென்றன என்பது வாக்கு எண்ணிக்கை நாளன்று தெரியவந்துவிடும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments