திருச்சியில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதம்

0 305

திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் எதிரே உணவகத்தில் சிலிண்டர் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன.

அங்கமுத்து என்பவரின் உணவகத்தில் நள்ளிரவில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதாக கூறப்படும் நிலையில், 3 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

தீவிபத்தில் சுமார் 10 லட்ச ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கக்கூடும் என கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments