சிவகாசியில் ரசாயன கலவை தயாரிக்கும்போது வெடி விபத்தில் 2 பேர் பலி

0 326

சிவகாசியை அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். தொழிலாளர்கள் 4 பேர், ஒரே அறையில் ரசாயன கலவை தயாரித்துகொண்டிருந்தபோது, கை தவறி கலவை கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

இதில், அறை தரைமட்டமாகி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்து நடந்த ஆலையில் ஆய்வு செய்த சார் ஆட்சியர் பிரியா, ரசாயன மூலப்பொருட்களை முறையாக கையாளாததே விபத்திற்கு காரணம் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments