உக்ரைனிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் - 20 பேர் பலி... தாக்குதலில் தரைமட்டமான குழந்தைகள் நல மருத்துவமனை

0 354

உக்ரைனிய நகரங்கள் மீது வழக்கத்துக்கு மாறாக பகல் பொழுதில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் உக்ரைன் ரஷ்யா போரில், தலைநகர் கீவ் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்தார்.

தாக்குதலில் குழந்தைகளுக்கான முக்கிய மருத்துவமனை ஒன்று இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் துரிதமாகத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments