சென்னையில் பட்டப்பகலில் யூடியூபரை மிரட்டி கேமராவை பறித்த விவகாரத்தில் 3 பேரை கைது

0 437

சென்னையில் மின்னணு பொருட்கள் மொத்த விற்பனை நடைபெறும் ரிச்சி தெருவில், யூடியூபர் ஒருவரை மிரட்டி கேமராவை பறித்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அந்த தெருவை பற்றி நந்தா என்ற யூடியூபர் தனது நண்பர்களுடன் வீடியோ எடுத்தபடி சென்றதாக தெரிகிறது. அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒருவர், தாம் பெரிய ரவுடி என்று கூறி அவர்களது கேமராவை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

மது போதையில் இருந்ததாக கூறப்படும் அந்நபரும் அவரது கூட்டாளிகளும் பேனா கத்தி வைத்திருந்ததாகவும் இதனால் செய்வதறியாது தவித்ததாகவும் நந்தா தெரிவித்தார்.

இதைப் பார்த்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதை இளைஞர்களிடம் பேசி கேமராவை வாங்கிக் கொடுத்ததாகவும், அந்த வீடியோவை நந்தா தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. இதன் பேரில் கானா குரு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments