சென்னை மாநகர காவல் ஆணையர்... ரவுடிகளுக்கு புரியும் மொழியில் காவல்துறை நடவடிக்கை இருக்கும்: அருண்

0 411

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு பேட்டியளித்த அவர், அதிகாரிகள் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டாலே குற்றங்கள் குறையும் என்றார்.

1998-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ்.ஸாக தேர்வான அருண், கரூர், குமரி, திருப்பூர் மாவட்டங்களின் எஸ்.பி.யாகவும், சென்னையில் அண்ணா நகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையராகவும் பணியாற்றியவர்.

2012-இல் பதவி உயர்வு பெற்று திருச்சி சரக ஐ.ஜி.யாகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். 2022-இல் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராகவும் செயல்பட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றிய போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தவர் அருண்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments