கடலூரில் அரசு நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் மீது விவசாயிகள் புகார்

0 226

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடைபோட பணியாளர்கள் தாமதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளர்.

தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை எடை போடாமல் வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊழியர்கள் எடை போட்டு கொள்முதல் செய்வதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் தேக்கமடையும் நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்யும் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments