சென்னையின் 110வது காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்

0 412

சென்னை பெருநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அருண், 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர்.

சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையராக பணியாற்றியதுடன், சி.பி.சி.ஐ.டி பிரிவிலும் நீண்ட நாள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

2012-ம் ஆண்டு காவல்துறை ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக ஐ.ஜி.யாகவும் பின்னர் திருச்சி மாநகரின் காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். 2022-ம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று, ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் அருண் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜுன் மாதம் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பேற்று மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கவனித்துவந்த அருண் தற்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments