டி-20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி... 15 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிடிற்கும் ரூ.5 கோடி பரிசு

0 979

டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பி.சி.சி.ஐ. சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களில், ஒரு போட்டியில் கூட விளையாடாத யாஷ்வி ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சன் ஆகிய மூவருக்கும் அதே தொகை வழங்கப்பட உள்ளது.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடிற்கு 5 கோடி ரூபாயும், உதவி பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 26 பேருக்கு ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டரை கோடி ரூபாய் வரை கிடைக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments