ஈரோட்டில் இரும்பு கடை முன்பு அமர்ந்து மது அருந்த முயன்றபோது தடுத்ததால் லாரி ஓட்டுநரை பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

0 280

ஈரோட்டில் இரும்பு கடை முன் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதாக கூறப்படும் லாரி ஓட்டுரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சூளை என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய அந்த இளைஞர்கள், அருகிலிருந்த இரும்பு கடை முன்பாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

கடைக்கு முன் ஏன் குடிக்கிறீர்கள் என்று கேட்ட கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், கடை உரிமையாளருக்கு ஆதரவாக பேசிய ராமு என்ற ஓட்டுநரை மது பாட்டிலால் அடித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments