கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம்மை உடைத்து ரூ.14.50 லட்சம் கொள்ளை...

0 304

ஓசூரில் கியாஸ் வெல்டிங் மூலம் ஐடிபிஐ வங்கி ஏ.டி.எம்மை உடைத்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த கும்பலே, பெங்களூரில் சி.சி.டி.வி கேமராவிற்கு கருப்பு மை பூசி விட்டு அதேப் பாணியில் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஓசூரில் கொள்ளையடித்த கும்பல் ஏடிஎம் ஷட்டரை பூட்டி விட்டுச் சென்றதால் மறுநாளில் தான் கொள்ளை போனதே தெரிய வந்த நிலையில், அதே நாளில் பெங்களூரு அருகிலுள்ள பெல்லந்தூர் பகுதியிலும் தனியார் ஏடிஎம்மில் கொள்ளை நடந்துள்ளது.

இரண்டு சம்பவத்தின் சி.சி.டி.வி பதிவுகளையும் ஒப்பிட்டு விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments