ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகள் கைதானார்களா? சரணடைந்தார்களா? - சீமான் கேள்வி

0 486

தமிழ்நாட்டில் 31 நாட்களில் 133 படுகொலைகள் நடந்திருப்பதாகக் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு முறையான பாதுகாப்பை காவல்துறை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  சரணடைந்தவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments