தந்தை இறந்து 3 ஆண்டுக்குப் பிறகு வாரிசு வேலைக்கு விண்ணப்பித்த மகன்.. உதவிக்குச் சென்ற விசிக நிர்வாகி பெண் அலுவலருடன் வாக்குவாதம்

0 564

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண் அலுவலகருடன் விசிக பிரமுகர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

பண்ணப்பட்டி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்த ஆண்டி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அரசு ஊழியர் இறந்து மூன்று வருடத்திற்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில்  அவரது மகன் பிரகாசம் 3 வருடம் கழித்து  விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதனால்  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து பிரகாசம் சேலம் மாவட்ட விசிக  நிர்வாகி ஆறுமுகம் என்பவரின் உதவியை நாடி உள்ளார்.

அதைத் தொடர்ந்து ஆறுமுகம் காடையாம்பட்டி வட்டாட்சியர்அலுவலகத்திற்கு சென்று பெண் அலுவலர் கலா என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments