பிரசாரத்தின்போது அமைச்சர் முன் தி.மு.க. - நா.த.க.வினர் மோதல்.. முதலமைச்சர் குறித்து நா.த.க.வினர் அவதூறாகப் பேசியதாக புகார்

0 1190
பிரசாரத்தின்போது அமைச்சர் முன் தி.மு.க. - நா.த.க.வினர் மோதல்.. முதலமைச்சர் குறித்து நா.த.க.வினர் அவதூறாகப் பேசியதாக புகார்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, விழுப்புரம் மாவட்டம் துறவி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் துறவி கிராமத்தில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா மற்றும் கட்சியினர், அமைச்சரையும், முதலமைச்சரையும் அவதூறாகப் பேசியதாகவும், அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments