அரசியல் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை - அஸ்ரா கார்க்

0 383
அரசியல் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை - அஸ்ரா கார்க்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் அடிப்படையில் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 தனிப்படைகள் அமைத்து 4 மணி நேரத்தில் 8 நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து கைது செய்துள்ளோம். சோமேட்டோ ஊழியர்கள் போல நான்கு பேர் மாறுவேடத்தில் வந்து கொலை செய்துள்ளதால், சோமேட்டோ டி சர்ட், பேக்,  7 அரிவாள்கள், 3 பைக்குகள் கைப்பற்றியுள்ளோம். மேலும் 3 நபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments