கோபிசெட்டிபாளையத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்றவர் உயிரிழப்பு

0 361

கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற நபர் உயிரிழந்தார். அர்ச்சுனன் என்பவர் தனது மகனை கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு செல்ல கோபி - ஈரோடு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அர்ச்சுனன், கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments